தர்மபுரி அடுத்த சவுலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை அருகே உள்ள தனியார் பார்சல் டெலிவரி அலுவலகத்தை சங்கர் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு டெலிவரி செய்த பணத்தை லாக்கர் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரவு இந்த தனியார் டெலிவரி பார்சல் டெலிவரி அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த லாக்கர், பணம் 11 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை வழக்கம் போல் அலுவலகத்தை திறப்பதற்காக சங்கர் வந்துள்ளார். அப்பொழுது கடையில் போட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு சங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், அதிலிருந்த 11 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்து ஆய்வுசெய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)
இந்நிலையில் தனியார் பார்சல் டெலிவரி அலுவலகத்தில் நுழைந்து ஒருவர் லாக்கர் மற்றும் பணத்தை திருடி செல்லும் காட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பணம் மற்றும் லாக்கரை திருடி சென்ற மர்ம நபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Crime News, Dharmapuri, Robbery, Theft