கடலூர் செமண்டலம் பகுதியில் அரவிந்த் என்பவரது வீட்டில் உள்ள ஏசியில் இரவு நேரங்களில் சத்தம் வந்துள்ளது. எலி புகுந்து இருக்கலாம் என நினைத்து அரவிந்த் ஏசியை பார்த்த போது ஏசியில் பாம்பு தோல் உரித்ததற்கான அடையாளம் அதில் காணப்பட்டதால் ஏசி மெக்கானிக்கை அவர் அழைத்தார். ஏசியை வந்து பார்த்த ஏசி மெக்கானிக் அந்த ஏசிக்குள் பாம்பு இருப்பதை கண்டுபிடித்தார்.
இந்த நிலையில் பாம்பு ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செல்லா, ஏசி மெக்கானிக் உடன் இணைந்து அந்த ஏசியை கழட்டிய போது அதனுள் 3 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்பை பிடித்த செல்லா அதனை பாதுகாப்பாக காப்பு காட்டில் விட்டார்.
ஏசிக்கு பின்புறம் அவுட்டோர் யூனிட்டில் இருந்து உள்ளே வரும் காப்பர் குழாய்கள் உள்ளே வரும் பகுதியை சரியாக அடைகாவிட்டால் அதன் பின்புறம் இருக்கும் மரம் செடி கொடிகளின் வழியாக அதனுள் பாம்புகள் புகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பாம்பு ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.