முகப்பு /செய்தி /கடலூர் / கடலூரில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு

கடலூரில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

PMK NLC Protest | விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலத்தை சமன்படுத்தும் பணிக்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக மேல்வலைமாதேவி, கீழ்வளைமாதேவி, கரிவேட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம் ஆண்டும் வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து தற்போது இதே கிராமத்தில் கூடுதலாக இழப்பீடு வழங்கி மேலும் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதனால் முன்னதாக நிலம் கொடுத்த மக்கள், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கீழ்வளைமாதேவி பகுதியில் 2006ல் கையகப்படுத்திய நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டது.

எதிர்ப்பை மீறி நடைபெற்ற இந்த பணியால், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு  போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, Neyveli, NLC, PMK