தமிழக முதல்வர் விரைவில் நலம்பெற மக்கள் தொடர் பிரார்த்தனை செய்ய வேண்டும்: அமைச்சர் சி.வே.கணேசன் வேண்டுகோள்
தமிழக முதல்வர் விரைவில் நலம்பெற மக்கள் தொடர் பிரார்த்தனை செய்ய வேண்டும்: அமைச்சர் சி.வே.கணேசன் வேண்டுகோள்
Cuddalore District : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மக்களுக்கு சேவையாற்ற விரைந்து மீண்டு வர மக்கள் தொடர் பிராத்தனை செய்ய வேண்டும் என நெய்வேலியில் அமைச்சர் சி.வே.கணேசன் வேண்டுகோள் விடுத்தார்.
Cuddalore District : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மக்களுக்கு சேவையாற்ற விரைந்து மீண்டு வர மக்கள் தொடர் பிராத்தனை செய்ய வேண்டும் என நெய்வேலியில் அமைச்சர் சி.வே.கணேசன் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு துறை சார்நத நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் கலந்து கொண்டு இலவச மனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு வைப்பு தொகை, மகளிர் திட்டம் , வேளாண்மைத்துறை உள்ள பல்வேறு துறை சார்ந்த ரூ 5 கோடி 75 லட்சம் மதிப்பில் 600 க்கு மேற்பபட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன்,மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் பண்ருட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சபா.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் சி.வே.கணேசன் ,” கொரோனா நோயால் மக்கள் கடந்த 2 ஆண்டுகாலம் கடுமையாக அவதிப்பட்டனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸடாலின் தலைமையில் அரசு அமைந்தவுடன் மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்டு கொண்டு வரவேண்டும் என்று அனைத்து தடுப்பூசிகளை கொண்டு வந்து மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கினார்.
இந்தியாவில் தலைசிறந்த முதல்வர் தமிழக முதல்வர் என பெயர்பெற்றவர். தடுப்பூசிகளை கொடுத்து மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்டார். ஆனால் இன்னும் இந்த கொரோனா தொற்று நம்மை விட்டு விலகவில்லை. தற்போது அரசு அமைந்ததில் இருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று மாவட்டம் மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார். நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கி வருகிறார்கள்.
தற்போது மக்களுக்கு சேவையாற்றி வந்த தமிழக முதல்வர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தி கொண்டாலும் முதலமைச்சர் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அதன்ப்படி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தொடந்து சேவையாற்ற வேண்டும் என நினைத்து கொண்ட தமிழக முதல்வர் மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து மீண்டு வர வேண்டும் என கழக நிர்வாகிகள் மட்டும் அல்ல பொதுமக்கள் அனைவரும் தொடர் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.