கடலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தன்னை பிடித்து விளையாடிய போதை ஆசாமியை பாம்பு கடித்துக் கொன்றது. கடலூரில் மது போதையில் பொதுமக்களுக்கு புத்தாண்டு பரிசு என கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து விளையாடிய இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயன் நகரை சேர்ந்த மணிகண்டன் நேற்று இரவு மதுபோதையில் அப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதி வழியாக சென்ற கண்ணாடி விரியன் பாம்பை ஆர்வமாக சென்று பிடித்துள்ளார்.
அந்தப் பாம்பு அவரை கடித்த நிலையிலும், பாம்பினை அங்கிருந்தவர்களிடம் இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பாம்புடன் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவருடன் வந்த கபிலன் என்பவரையும் பாம்பு கடித்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்து கொன்றுவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bite, Cuddalore, New Year Celebration, Snake