கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு சுமதி என்ற மனைவியும் 1 மகன் 2 மகள் உள்ளனர். மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தநிலையில், நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் மனைவியுடன் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது .
பிறகு நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் குடிபோதையில் மகன் என்று தெரியாமல் மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழுவிக்கல்லை தூக்கிபோட்டார். இதனால் பலத்தகாயம் அடைந்த அர்ஜுன் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற மகனையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.