கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (45). இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பொய்யாபிள்ளைசாவடி என்ற இடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு அருகிலேயே உள்ள தாயம்மாள் நகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணேஷ் உரம் பூச்சி மருந்து கடை வைத்ததில் அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கணேஷ் வீட்டிற்கு திராட்சை பழச்சாறு வாங்கி வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினருக்கு தெரியாமல் அதில் எலி பேஸ்டை கலந்துள்ளார். பின்னர் அந்த பழச்சாறை தனது மனைவி கல்பனா (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண்(9) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் விஷம் கலந்த பழச்சாறை தானும் குடித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து கணேஷின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்துள்ளனர்.
இதைப் பார்க்க முடியாத கணேஷ், தனது சொந்த ஊரான வாண்டையாம்பள்ளம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தின் முந்திரி தோப்புக்கு சென்றுள்ளார். பின்னர் தனது செல்போன் மூலம் பு.முட்லூர் கிராமத்தில் உரக்கடை வைத்துள்ள தனது நண்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: ராமஜெயம் வாழ்க்கையில் ‘விளையாடிய’ கிரிக்கெட்? எஸ்.ஐ.டி. விசாரணையால் பரபரப்பு
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணேஷின் உடலை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய கணேஷின் உறவினர்கள்,
கணேசிடம் ஏராளமானோர் கடன் வாங்கிக் கொண்டு அவரிடம் பணத்தை திருப்பி தராததால் அவர் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி கடன் தர வேண்டியவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட கணேஷ் கடைசியாக இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் கடிதத்தில், தனக்கு யார் யார் பணம் தர வேண்டும் என்ற விபரங்களை எழுதியதோடு, தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களையும் எழுதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cuddalore