சிதம்பரம் அருகே முன்னாள் காதலியின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் தவறாக வெளியிட்டவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் அருகே 16 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த கொத்தனார் தொழில் செய்து வரும் மணிகண்டன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டன் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் 16 வயது சிறுமி பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொத்தனார் மணிகண்டன் சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, இது குறித்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மணிகண்டனை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Crime News, Local News, Pocso