கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் செராமிக் அருகே உள்ள ஆலடி ரோட்டில் தனியார் பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி விருத்தாசலம் சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் அந்த தனியார் குடோனுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தம் புதிதாக ஸ்டிக்கர் கூட பிரிக்காமல் 10க்கும் மேற்பட்ட விலை இல்லா சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பழைய இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இலவச சைக்கிள்களை அதிரடியாக பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். மேலும் கடையின் உரிமையாளர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் இரும்பு குடோனில் அரசின் இலவச சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : பிரேம் ஆனந்த் - கடலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cuddalore, Local News