முகப்பு /செய்தி /கடலூர் / பழைய இரும்பு கடையில் கிடந்த இலவச மிதிவண்டிகள்... விருதாச்சலத்தில் பறிமுதல் செய்த அரசு அதிகாரிகள்!

பழைய இரும்பு கடையில் கிடந்த இலவச மிதிவண்டிகள்... விருதாச்சலத்தில் பறிமுதல் செய்த அரசு அதிகாரிகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Cuddalore News : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழைய இரும்பு கடையில் அரசு பள்ளி மாணவர்கள் மிதிவண்டி கிடந்ததால் பரபரப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhachalam, India

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் செராமிக் அருகே உள்ள ஆலடி ரோட்டில்  தனியார் பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி விருத்தாசலம் சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் அந்த தனியார் குடோனுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தம் புதிதாக ஸ்டிக்கர் கூட பிரிக்காமல் 10க்கும் மேற்பட்ட விலை இல்லா சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பழைய இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இலவச சைக்கிள்களை அதிரடியாக பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். மேலும் கடையின் உரிமையாளர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் இரும்பு குடோனில் அரசின் இலவச சைக்கிள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : பிரேம் ஆனந்த் - கடலூர்

First published:

Tags: Crime News, Cuddalore, Local News