கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கபடி குழு சார்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்ற நிலையில் ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கீழக்குப்பம் மற்றும் புறங்கணி அணிகள் மோதின.
இதில் புறங்கணி அணியைச் சேர்ந்த விமல்ராஜ் ரெய்டு சென்றபோது அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் இருக்க விமல்ராஜ் துள்ளிக் குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த விமல்ராஜ் ஆடு களத்திலே மயக்கம் அடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விமல்ராஜை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கபடி விளையாடும் களத்திலேயே வீரர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜுக்கு தாய், கண்பார்வையற்ற தந்தை மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரமே விமல்ராஜை நம்பி இருந்த நிலையில் அவர் களத்திலேயே உயிரிழந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என நீயுஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
விமல்ராஜின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை விமல்ராஜின் குடும்பத்தினரிடம் திமுக அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியாக ரூ.2 லட்சத்தையும் வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னதாக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் கபடி வீரர் குடும்பத்திற்கு அவருடைய நிதியிலிருந்து ரூபாய் 50,000 வழங்கியிருந்தார். பின்னர் மாணாடிகுப்பம் கிராமத்தில் நடத்தப்பட்ட கபடி விழாவில் விமல்ராஜ் பங்கேற்றதால் மாணாடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 3 லட்சம் ரூபாயை அந்த குடும்பத்திற்கு வழங்கினார். இதேபோல் கபடி அஷோசியன் சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
Must Read : வேலை இல்லாததால் கஞ்சா செடிகளை வளர்த்தேன்.. கோவையில் சிக்கிய வடமாநில இளைஞர்
இந்நிலையில், உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உங்கள் நகரத்திலிருந்து(கடலூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.