கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று அச்சத்தால், குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மருத்துவமனை செல்ல பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். எனினும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதன்படி பச்சிளம் குழந்தைகளுக்கு பிசிஐ தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஹெபாடைடிஸ்-பி தடுப்பூசி ஆகியவை உரிய நேரத்தில் செலுத்தப்பட வேண்டும். இதேபோல் குழந்தை பிறந்த 6 வாரம், 10வது வாரம், 14 வாரங்களில் செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். 9வது மாதத்தில் MMR அல்லது MR தடுப்பூசியும் கட்டாயம் ஆகும்.
இந்த தடுப்பூசிகளுக்கு இடையே சின்னம்மை, டைபாய்டுக்கு எதிரான தடுப்பூசிகளையும் போடலாம் என குறிப்பிடும் மருத்துவர்கள், ஆனால் இவை கட்டாயம் இல்லை என தெரிவிக்கின்றனர். கொரோனாவை காரணம் காட்டி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தள்ளிப்போடக் கூடாது என்றும், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிதான் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.