விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவர் தான் பயின்ற கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்குட்பட்ட கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தான "ஆர்செனிக்கம் ஆல்பம் 30 C"-ஐ வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து அளிக்கும் பணியைத் துவக்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டை கிராமத்தில் இதனைத் துவக்கி வைத்தார். கோட்டக்குப்பம் காவல் துணை கோட்டத்திற்கு உட்பட் 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், காவல் துறையினரைக் கொண்டு குழுவை அமைத்து முறையாக ஹோமியோபதி மருந்தை அளித்து முறையாக சாப்பிட அறிவுறுத்துகின்றனர்.
Also see:
ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள், அதில் வசிப்பவர்கள்,அவர்களது தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெறும் இக்குழுவினர் மாத்திரையை முறையாகச் சாப்பிடுகிறார்களா என்பதை உடனுக்குடன் அறிகின்றனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பது மட்டும் காவல் துறையின் பணி அல்ல. மக்களின் உயிரைப் காப்பதும்தான் என்பதற்கு விழுப்புரம் காவல்துறையினரின் இந்த பணி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.