கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது, இதயத்தை துளைக்கும் மோசமான மைல்கல் என, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணக்கார நாடுகளுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்கிறது, ஆனால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தார். தற்போதைய சூழலில் அறிவியல் வெற்றி பெறுவதாகவும், ஆனால் மனிதர்களுக்கு இடையேயான ஒற்றுமை தோல்வி அடைவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சில நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருவதாகவும், ஐநா பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.