இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகின் மிகச் சிறந்த சொத்தாக கருதுகிறோம் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியுள்ளார்.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளை போடும் பணி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில், தொடங்கிய நிலையில், உலக நாடுகள், இந்தத் தடுப்பூசிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவிற்கு இந்தியா 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க உள்ளது.
இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், “இன்று இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் உலகின் மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம்.
மேலும் படிக்க... என்னை வாளால் வெட்ட வந்தார்கள்; எங்களைத் தாக்கியது குண்டர்கள்தான், விவசாயிகள் அல்ல: டெல்லி போலீஸார்
உலகளாவிய கெரோனா தடுப்பூசி பிரசாரம் சாத்தியமா என்பதை உறுதி செய்வதில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க, இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என்று அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.