தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவு செய்யும் பயோமெட்ரிக் பதிவில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனோ நோய் வேகமாக பரவி வருவதன் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயொமெட்ரிக் பதிவு வைக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகை மார்ச் 31 ந் தேதி வரையில் பதிவு செய்ய வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தாமல், வருகைப் பதிவேடு மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றி, தமிழகத்திலும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகை மூலம் தங்களின் வருகைப் பதிவை மார்ச் 31-ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், வருகைப்பதிவேட்டில் உரிய பதிவை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.