முகப்பு /செய்தி /கொரோனா / கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!

கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!

புதுவை முதல்வர் நாராயணசாமி.

புதுவை முதல்வர் நாராயணசாமி.

கொரோனா தடுப்பு பணிக்காக புதுச்சேரி அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருப்பதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியில் கட்டிட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் என்று  முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில்  விவசாயத் தொழிலுக்கு முன்னூரிமை அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் நேற்றைய தினம்  10 ஆயிரம் பேர் பணிபுரிந்துள்ளனர் என்றும்  இலவச அரிசி 10 தொகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் நகர பகுதியில் இது விரைவில் தொடங்கும். மஞ்சள் ரேஷன் கார்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் கூறினார். கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்களின் வைப்பு நிதியில் இருந்து ரேஷன்கார்டுக்கு ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார.

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமலேயே நிதி நெருக்கடியான காலகட்டத்தில் மாநில அரசின் நிதியில் உதவி அளித்து வருகிறோம். இக்கட்டான இந்த காலகட்டத்தில் மத்திய அரசு உதவ வேண்டும்.  ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு  நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் சுற்றுலா முடக்கம். வரி வருவாய் தரும் அனைத்தும் முடக்கம். மீண்டும் பழைய நிலை திரும்ப வெகு நாட்களாகும். எனவே, உரிய நிதியை புதுச்சேரிக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமரிடம் பேசியபோது புதுச்சேரியில் நோய் தொற்று இல்லை. நீங்கள் அதிஷ்டசாலி என பாராட்டிய பிரதமர் நிதி வழங்குவதாக உறுதியளித்தார் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

ஊரடங்கை தளர்த்துவதால் 250 தொழிற்சாலைகளை திறக்க மனு வந்துள்ளது. இதுவரை ஒன்று கூட திறக்கவில்லை. அரசின் கடுமையான விதிகளை பின்பற்றினால்தான் தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக புதுச்சேரி அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருப்பதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: CoronaVirus, Puducherry, Puthucherry cm