கொரேனா தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா 2-ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் முடியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிக் கொள்முதல் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள், திட்டமிடல் தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசிக்க இருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Must Read : தடை செய்யப்பட்ட நாட்டிற்கு தடையை மீறி சென்றவா் திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது
கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகம்,
கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் இரவுநேர
ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.