திருவனந்தபுரத்தில் நாள்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவதால், அங்கு மருத்துவமனைகள் நிரம்பி பலரும் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாறசாலை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள், மருத்துவமனை கிடைக்காததால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இந்த சூழலில் தொற்றாளர்களின் வீடுகளுக்கு மருத்துவர்களே சென்று சிகிச்சை அளித்தால் என்ன என யோசித்த பாறசாலை ஊராட்சி ஒன்றியம், இதற்காக "அருகே ஒரு மருத்துவர்" எனும் தலைப்பில் மொபைல் கிளினிக்-கை அமைத்தது.
இந்த குழுவில் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளர், உதவியாளர் என நான்கு பேர் இருக்கின்றனர். பாறசாலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்கு செல்லும் இந்த குழுவினர், அவர்களிடம் அன்புடன் நலம் விசாரித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோக, அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி போன முகக்கவசத்தையும் வழங்குகின்றனர்.
டெலி மெடிஸின் எனும் பெயரில் முக நூல் மூலம் நேரலையில் வரும் மருத்துவர்கள், வீடுகளில் இருக்கும் தொற்றாளர்களின் சந்தேகங்களுக்கும் தீர்வு காண்கின்றனர். மருத்துவர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து சிகிச்சையளிப்பது தொற்றாளர்களுக்கு மிகுந்த ஆறுதலை கொடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.