BREAKING | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று
கோவை ஆட்சியரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
- News18
- Last Updated: July 15, 2020, 8:11 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று காலை கோவை ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அறிகுறிகள் இல்லாமல் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் இன்று 1291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
தமிழகத்தில் நான்காவது முறையாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் இன்று 1291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.