இந்தியா - இஸ்ரேல் மருத்துவ வல்லுநர்கள் இணைந்து கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியின் முதல் கட்ட சோதனை இஸ்ரேலில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் பரிசோதனைக்க திட்டமிடப்பட்டுள்ளாது.
இதற்காக இஸ்ரேலிய மருத்துவக் குழு இந்தியா புறப்பட்டுள்ளது. இந்தியா - இஸ்ரேல் கூட்டு முயற்சியில் 4 கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில், இரு கருவிகள் மூலம் உமிழ் நீரை கொண்டு கொரோனா தொற்று இருகிகிறதா என்பதை சில நிமிடங்களில் கண்டறிய முடியும்.
குரல் மாதிரி மற்றும் சுவாசிப்பதை வைத்தே தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் வகையில் இரு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த கருவிகள் பரிசோதிக்கப்பட உள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.