ஜெர்மனியில், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளால் நம்பப்படுகிறது.
பிராங்பர்ட் நகரின் அமைந்துள்ள ரயில்வே ட்ராக் அருகில் சனிக்கிழமை நள்ளிரவு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மூத்த அமைச்சரான வோல்கர் பெளஃபேர் இதை உறுதி செய்துள்ளார். தாமசின் மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரது இந்த முடிவு நம்பமுடியாததாகவும், துயரத்தில் ஆழ்த்துவதாகவும் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
"கொரோனா வைரசால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்வதற்கு தாமஸ் மிகக்கடுமையாக உழைத்தார்.
நிறுவனங்கள், பணியாளர்கள் என இருதரப்பு நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதே நேரத்தில், கடுமையான மனஉளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதை தற்போது தங்களால் உணர முடிகிறது. அவரது இழப்பு ஜெர்மனிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. நாங்கள் துயரத்தில் இருக்கிறோம்" என்று வோல்கர் பெளஃபேர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.