திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனைமனையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று முழு குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா வார்டில் திருச்சி மாவட்டத்தினர் 14 பேர் உட்பட 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பணிபுரியும் மாநகராட்சி, பில் கலெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, வெளி மாநில மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருந்தது.
முதல் முறையாக திருச்சியில் வசிக்கும் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து முதல் முறையாக மாநகராட்சி ஊழியருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும்,கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த, ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண் இன்று உயிரிழந்தார். திருச்சியில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.