ஒடிஷா, சட்டிஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்பு சட்னியை தங்கள் உணவின் ஒரு பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். சிவப்பு எறும்புகள் மற்றும் பச்சை மிளகாயை கொண்டு இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது வரும் காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக இந்த சிவப்பு எறும்பு சட்னியை அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சிவப்பு எறும்பு சட்னி கொரோனா வைரஸை எதிர்க்கும் செயல் திறனை கொண்டிருப்பதாக நயாதர் பதியால் என்னும் பொறியாளர் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், விட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பதியால் தெரிவித்திருந்தார்.
இதனால் ஒடிஷா, மேற்கு வங்காளம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சிவப்பு எறும்பு சட்னியை உணவில் சேர்ப்போருக்கு கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
அவரது பரிந்துரையின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் பதியால் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க.
..தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை 11 இடங்களில் நடைபெறுகிறது... (வீடியோ)
கொரோனாவை வெல்ல தடுப்பூசிகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் சிவப்பு எறும்பு சட்னியும் அந்த வரிசையில் சேருமா என்பது இன்னும் மூன்று மாதங்களில் தெரிந்து விடும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.