கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இதையேற்று மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நோய் தடுப்பு பணியில் இருக்கும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சட்டமியற்ற கோரியும் இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய "ஒயிட் அலர்ட்" எனப்படும் அடையாள போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி வலியுறுத்த வேண்டும் என்றும் வியாழக்கிமையை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மருத்துவர்கள் இக்கட்டான சூழலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருவதாக அமித்ஷா பாராட்டினார். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.
மேலும், மருத்துவர்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்பதால் அடையாள போராட்டம் கூட நடத்த வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனையேற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் ராஜன் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட்டிருக்கும் நிலையில், இதுபோன்று போராட்டங்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தவறான முன்உதாரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.