தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில் தலைநகர் டெல்லியும் உள்ளது.
போலீசார், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று கொரோனா தனது வலையை விரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், பிறரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
Also See:
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.