சென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா?
சென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மாற்றமானது 99.9 சதவிகிதத்திற்கும் அதிகமான நீர்த்துளியின் திரவ உள்ளடக்கம் சில நிமிடங்களுக்குள் மறைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், மீதமுள்ள திரவத்தின் பாதுகாப்பு அதன் படத்தில் வைரஸ் இன்னும் செழித்து வளரச் செய்கிறது. மேலும் வைரஸில் உள்ள நானோமீட்டர் தடிமனான படம் ஆவியாதல் செயல்முறையை குறைக்கிறது என்பதை உறுதி செய்துள்ளனர்.
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 3:46 PM IST
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் நடத்துகிறது. தமிழகத்தில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு, இந்த பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...மாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி ஆனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், ராமச்சந்திர மருத்துவமனை விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி ஒன்றே தீர்வாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆங்காங்கே பக்க விளைவிகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுவது, ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு, இந்த பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...மாஸ்டர் திரைப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தையில் இழுபறி
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி ஒன்றே தீர்வாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆங்காங்கே பக்க விளைவிகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுவது, ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்