வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிவது அவசியம் - நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல்
வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிவது அவசியம் - நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல்
நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல்
வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போது கூட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விருந்தாளிகள் யாரையும் வீட்டிற்கு அழைக்காதீர்கள் என்றும் நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பவுல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவுவாகவும் இந்த சூழலில் மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என வலியுறுத்தினார். வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வீட்டிற்கு எந்த விருந்தாளிகளையும் அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். பெண்கள் மாதவிடாய் காலங்களில் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் வி.கே.பவுல் கூறினார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே ஒன்றாம் தேதி சனிக்கிழமையும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.