தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,869 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4019 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. கடந்த ஒரிரு நாளாக கொரோனா பாதிப்பு 3000-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதன் படிகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,19 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 351உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,924 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 764 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.