குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஷாக் தகவல்கள்
இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமின்றி கொரோனா தொற்று பரவலாக அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்த போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலியல் வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துகிறது.
- News18
- Last Updated: June 4, 2020, 11:44 PM IST
கடந்த வாரம் முதல் வழக்கத்தை விட அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கடந்த 14 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே 70 விழுக்காடு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பாதிப்புகள் உயர்ந்துள்ளன.
இதேபோல் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்த 3 மாநிலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதேபோன்ற நிலை கடந்த 2 வாரங்களாக பீகாரிலும், கடந்த வாரத்தில் கர்நாடகா, ஹரியானா மற்றும அசாம் மாநிலத்திலும் காணப்படுகிறது. ஒடிசா, ஆந்திரா மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி மேற்கு வங்கத்தின் கூச் பெஹர், ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் ஜலவார், உத்தரகண்ட்டின் டேராடூன் ஆகிய மாவட்டங்கள் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.
இந்தியாவில் கடந்த 14 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே 70 விழுக்காடு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பாதிப்புகள் உயர்ந்துள்ளன.
இதேபோல் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்த 3 மாநிலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.