புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 119 ஆக உயர்வு
புதுச்சேரியில் கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: June 7, 2020, 4:03 PM IST
புதுச்சேரியில் நேற்றுவரை 107 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70ஆகவும், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், மருத்துவர்களின் உறவினர்கள் 3 பேர், அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஊர்காவல் படை வீரர், புதிய சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திலாசுப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூயிலும், 9 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
Also see:
ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், மருத்துவர்களின் உறவினர்கள் 3 பேர், அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஊர்காவல் படை வீரர், புதிய சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திலாசுப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Also see: