கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 95 வயது. இவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்ததார். இதனைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்துடன், அவரின் மகள், பேரன், பேரனின் மனைவி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Must Read : கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க மூக்குத்தி இலவசம்
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லக்கண்ணு கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார். அவர் குணமடைந்து வீடு திரும்பியதால், தொண்டர்களும் உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, CPI, Nallakannu