மீண்டும் செயல்படத் துவங்கியது அம்மா முழு உடல் பரிசோதனை மையம் - புதிய பேக்கேஜ் அறிமுகம்
சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மீண்டும் செயல்பட துவங்கியது. அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய பரிசோதனை முறை கொரோனாவிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்
- News18 Tamil
- Last Updated: August 5, 2020, 12:02 PM IST
சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் இன்று வரை 20,000 பேர் பயனடைந்துள்ளனர். ஆனால், கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், கடந்த 4 மாதங்களாக மையம் இயங்கவில்லை. மீண்டும் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று துவங்கப்பட்டுள்ளது.
தினமும் சராசரியாக 50 முதல் 60 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது 10 முதல் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
அம்மா Gold, Diamond, platinum என 3 நிலைகளாக பரிசோதனை செய்யப்படும். அதில், அம்மா Gold என்ற பரிசோதனையில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் இரத்த பரிசோதனை, இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய 1000 ரூபாயும், அம்மா டைமன்ட் என்ற முறையில் எதிரொலி இதய துடிப்பு அளவீடு, புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாய் செலவில் செய்யப்படுகிறது. மேலும், அம்மா பிளாட்டினம் பரிசோதனையில், அம்மா டைமன்ட் பரிசோதனைகள் உட்பட, மார்பக சிகிச்சை பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகளை 3000 செலவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Also read... மாவட்ட வாரியாக கொரோனா புள்ளி விவரங்களை வெளியிடக்கோரி வழக்கு... அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா காலம் என்பதால், பரிசோதனைகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக பல்வேறு இணை நோய்களுடன் இருப்பவர்கள் தங்களது உடலில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அதற்கு தகுந்தார்போல சிகிச்சை மேற்கொள்ள உதவியாக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதனால், கூடுதலாக பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய முறையானது துவங்கப்பட்டுள்ளது. இதில் அம்மா பிளாட்டினம் உட்பட நுரையீரல் சார்ந்த பரிசோதனை, விரிவான கண் பரிசோதனை, பார்வை குறைபாடு பரிசோதனை, கண் நரம்பு பரிசோதனை, மூச்சாற்றல் அளவி ஆகிய பரிசோதனைகள் ரூ.4000 செலவில் செய்யப்பட்டுகிறது. இந்த பேக்கேஜ் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமும் சராசரியாக 50 முதல் 60 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது 10 முதல் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.
அம்மா Gold, Diamond, platinum என 3 நிலைகளாக பரிசோதனை செய்யப்படும். அதில், அம்மா Gold என்ற பரிசோதனையில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் இரத்த பரிசோதனை, இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய 1000 ரூபாயும், அம்மா டைமன்ட் என்ற முறையில் எதிரொலி இதய துடிப்பு அளவீடு, புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாய் செலவில் செய்யப்படுகிறது.
Also read... மாவட்ட வாரியாக கொரோனா புள்ளி விவரங்களை வெளியிடக்கோரி வழக்கு... அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா காலம் என்பதால், பரிசோதனைகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக பல்வேறு இணை நோய்களுடன் இருப்பவர்கள் தங்களது உடலில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அதற்கு தகுந்தார்போல சிகிச்சை மேற்கொள்ள உதவியாக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதனால், கூடுதலாக பிளாட்டினம் பிளஸ் என்ற புதிய முறையானது துவங்கப்பட்டுள்ளது. இதில் அம்மா பிளாட்டினம் உட்பட நுரையீரல் சார்ந்த பரிசோதனை, விரிவான கண் பரிசோதனை, பார்வை குறைபாடு பரிசோதனை, கண் நரம்பு பரிசோதனை, மூச்சாற்றல் அளவி ஆகிய பரிசோதனைகள் ரூ.4000 செலவில் செய்யப்பட்டுகிறது. இந்த பேக்கேஜ் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.