கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், தென்னாப்பிரிக்காவில் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஜிம்பாப்வே உள்ளிட்ட நகரத்தில் இருந்து வந்து, சட்டவிரோதமாக குடியேறிய ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசு உதவ முன்வராததால், தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி வருகின்றன.
அப்படி ஒரு தொண்டு நிறுவனம் உணவு வழங்கியபோது, நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.