பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்த வந்த கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 68 வயது முதியவர் மும்பையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா மிக வேகமாகப் பரவிவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிகம் பாதித்துள்ளது. இதுவரையில், மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த 68-வது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர், மும்பையிலுள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்று அறிந்தபிறகு அவர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், நேற்று இரவு அவர் உயிரிந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு டையாட்டிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தன என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.