கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போடப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களாக பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் இன்று திறக்கப்படுகிறது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாகை மாவட்டத்தில் 6 கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளை தவிர்த்து 98 கடைகள் இன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத காரணத்தால் 6 கடைகளும் திறக்கப்படாது என்று அறிவித்தனர். அதன்படி மூங்கில் சாரம் கட்டி, வர்ணம் பூசி தயாராக இருந்த 6 டாஸ்மாக் கடைகள் இன்று பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் திறக்கப்படவில்லை.
மேலும், 2 தடை செய்யப்பட்ட பகுதிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த 6 டாஸ்மாக் கடைகளை தவிர்த்து நாகை மாவட்டத்தில் 92 கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.