மானாமதுரை அருகே 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்!
மானாமதுரை அருகே 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்!
மானாமதுரையில் 300லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
”மானாமதுரை அருகே கீழப்பீடாவூர் ஊராட்சி உட்பட கீழமாயாளி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து போலீசார் ஆய்வு செய்துள்ளனர்”
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 300 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சாராயம் காய்ச்சிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் குடிமகன்கள் பலரும் மதுபாட்டில்களை தேடி அலைகின்றனர்.
இதனால் பழைய ஆட்கள் பலரும் மீண்டும் சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர். மானாமதுரை அருகே கீழப்பீடாவூர் ஊராட்சி உட்பட கீழமாயாளி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் வந்தது. அதனையடுத்து இன்று மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன், நாகராஜ், எஸ்.பி.தனிபிரிவு போலிசார் ராஜா,போலிசார் சந்திரன் ஆகியோர் முந்திரி காடுகளில் சோதனை நடத்தினர்.
இதில் கீழ மாயாளி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமு கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு பிடித்து அவரை கைது செய்து ஊறலை கீழே கொட்டி அழித்தனர். அதன் பின்னர் மானாமதுரை தாலுகா முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் சேர்ந்து வேலை செய்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.