தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 168 மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் 6 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 1200 மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர் ஆசிரியர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 6,170 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 1270 பேருக்கு இன்னும் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் இந்த தொற்று எண்ணிக்கை என்பது அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
மேலும் கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை அலட்சியமாக செயல்பட்டதாகவும் 12,000 ரூபாய் அபராதமும் தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது 5000 அபராதமும். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.