சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உள்ளிட்ட 10 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இன்று 4 வயது சிறுமி உள்பட 10 பேர் முழுவதும் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினர்.
அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், டீன் ரத்தினவேல் ஆகியோர் அவர்களுக்கு இனிப்புகள், பாதாம், முந்திரி, பழங்கள், துணிகள் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்றாலும் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துமனை டீன் ரத்தினவேல் கூறும்போது, ”சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட 10 பேர் சிகிச்சை அளிக்கபட்டு, அதன் பின் அவர்களை இரண்டு முறை ஆய்வுக்கு உட்படுத்தபட்ட பிறகு அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்த பிறகு தான் வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அதில் 4 வயது குழந்தை ஒன்றும் 85 வயது முதியவர் ஒருவரும் அடக்கம்.
மேலும், கொரரோன வைரஸ் தாக்கம் பற்றி யாரும் பயப்பட வேண்டாம் என அவர் தெரிவித்தர். தற்போது சிவகங்கை சேர்ந்த ஒருவர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.