கோவையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை காந்திபுரம் பார்க்கேட் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மாற்று திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனத்தை இயக்க முடியாமல் மிகுந்த சிரம்பட்டார்.
அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், மூன்று சக்கர வாகனத்தை இரு புறங்களிலும் உந்தித் தள்ளி அவருக்கு உதவி செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த இளைஞர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also see... மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகில் Data Entry வேலை
இதேபோல் நோயாளியுடன் மருத்துவமனைக்கு விரைந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மழைநீரில் சிக்கிக்கொண்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஆம்புல்னஸ் ஓட்டுநருக்கு உதவி செய்தனர். தண்ணீரில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அரசு மருத்துவமனை வரை ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore