கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 5 பேரையும் கோவை அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். வெடிபொருள் தயாரிக்க அவர் திட்டமிட்டிருந்த புகாரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று அவர்கள் 5 பேரையும் கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க | துப்பாக்கியை எடுக்க தயங்காதீங்க.." போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி.எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 5 பேரின் வீடுகளிலும், 5 குழுக்களாக பிரிந்து 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Kovai bomb blast, NIA