கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (19). இவர் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். மாதிரிதேர்வு முடிந்த நிலையில் ஊருக்கு செல்லாமல் விடுதியில் இருந்த மாணவன் நேற்று இரவு நீண்ட நேரமாகியும்உணவு அருந்த வராததால் அங்குள்ள சக மாணவர்கள் அவரை அழைக்கச்சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் கதவுவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவன் விஷ்ணு தூக்கில் தொங்கியவாறு இருப்பதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் காதல்.. பங்களா வீட்டில் குடித்தனம்.. பள்ளி மாணவியை கடத்தி சென்ற பைக் மெக்கானிக் கைது
மேலும் மாணவன் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் நீண்ட நேரம் ஆகியும் விடுதிக்கு வராமல் அலட்சியத்துடன் இருந்ததாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.விஷ்ணு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்லூரி காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி உதவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவனின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறி கல்லூரி முன்பு முற்றுகையிட்ட மாணவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கல்லூரிக்குள் அனுப்பி வைத்தனர்..
மேலும் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
----------------------------------------------------------------------------------------------தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
-----------------------------------------------------------------------------------------------
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student, Crime News, Local News, Pollachi, Tamil News