ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா. 32 வயதான இவர் கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கி யோகா பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ரமணா இன்று காலை அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, இளைஞர் ரமணாவின் தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் ஈஷா யோகா மையத்திற்குள் சென்று இளைஞர் ரமணாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனிடையே, தற்கொலைக்கு முன்பு ரமணா எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.