கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதிம் ஜோதிபுரத்தைச் சேர்ந்த ராணியும், பாக்கியலட்சுமியும் அருகருகே வசித்து நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ராணி தனது வீட்டில் 15 லட்ச ரூபாய் ரொக்கம் வைத்திருந்தார். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று, எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்றும் தனது மகன் சதுர்வேத கிரிநாதன் (35) தனியார் வங்கியில் (டச் பேங்க்) மேலாளராக வேலை செய்து வருகிறார் என்றும் அவரின் வங்கியில் பணத்தை செலுத்தினால் திருமண காலம் வரும் வரை அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி ராணி சதுர்வேத கிரிநாதனிடம் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.15 லட்சத்தை வீட்டில் வைத்து கொடுத்தார். இதற்கு அடுத்த நாள் சதுர்வேதகிரிநாதன் வங்கியை போலவே போலி ரசீதும் கொடுத்துள்ளார். சில வருடங்கள் கழித்து ராணி, பாக்யலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணத்தை விரைவில் தந்துவிடுவதாக கூறி வருடக்கணக்கில் இழுத்தடித்து வந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி, கடந்த 2020 ஆம் ஆண்டில் சதுர்வேத கிரிநாதன் மற்றும் அவரது தாயார் பாக்கியலட்சுமி மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Must Read : பாம்பு கடித்து உயிரிழந்த 13 வயது சிறுமி… மூன்று மாதங்களுக்கு முன்பு வன்கொடுமை… இறப்பில் தொடரும் மர்மம்..!
தலைமறைவாக இருந்த சதுரகிரி வேத கிரிநாதனை நேற்று இரவு கைது செய்தனர். இது போல வேறு யாரிடமாவது பண மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - ஜெரால்ட்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.