தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக தினமும் 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ரயில் பாதை செல்வதால், அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையார் அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்தது. ரயில் பாதைகளில் யானைகளின் நடமாடத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் வாளையாரை அடுத்த கஞ்சிக்கோடு் கொட்டாம்பட்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை 17 யானைகள் கொண்ட கூட்டம் ரயில் பாதையினை கடந்துள்ளது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் , தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது.
இதில் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது. குட்டி யானை காயங்களுடன் தப்பி கூட்டத்துடன் சென்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் ரயில் ஓட்டுனர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ரயில் மோதி யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also see... டி.வி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சோகம்!
மேலும் காயத்துடன் வனப்பகுதிக்குள் சென்ற குட்டி யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அந்த குட்டி யானையை கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கவும் கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மதுக்கரை - பாலக்காடு இடையே ரயில் பாதைகளில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்வதால் சூழலில் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Dead, Elephant