தமிழகத்தில்,
கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கன
மழை பெய்து வருகிறது.
கோவையில் நேற்று கனமழை பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலங்களுக்கு அடியிலும் பெருமளவில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில், கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வடகோவை பகுதிக்கு செல்வதற்காக தங்களுடைய காரில் ராம்நகர் கிக்கானி பள்ளி வழியாக சென்றனர். அவர்கள் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியிருந்த மழை நீரை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முற்பட்டனர்.
Must Read : தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது... ஆம்பூரில் பரபரப்பு
அப்போது பாலத்தின் அடியில் தேங்கி இருந்த மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரில் இருந்த ஏழு பேரும் வெளியேற முடியாமல் தவித்தனர். காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து அந்த காரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை. இதனால், அதில் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் காரில் பயணித்தவர்களும், நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் - ஜெரால்ட்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.