வதந்திகளைத் தவிர்க்கப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாட்ஸ்அப் குழு உருவாக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து, தொழில்துறையினருடன் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வதந்தி பரப்பியது தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, புலம் பெயர் தொழிலாளர்களுடன் உரையாடல் வைத்துக்கொள்ளவும் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களது மொழியிலேயே தகவல்களைத் தெரிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் மில்லில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திர பாபு, சமூக வலைத்தளங்களில் வெளியான தவறான செய்திகளைக் கண்டு அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தினார். அப்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதைத் தெரிவிக்கும் வகையில் காவல்துறை தலைவர் பேசுவதை வீடியோவாக எடுத்து தங்களது குடும்பங்களுக்கு அனுப்புமாறு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, Migrant Workers, Sylendra Babu