கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தாலுகா சாராம்பாளையம் பகுதியில் நேற்று மாலை சாலையின் ஓரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சென்றுபார்த்த போது சாலையில் கைப்பையில் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக 108-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பையில் இருந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். குழந்தையை கைப்பையில் வைத்து சாலையோரம் வைத்து சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குழந்தை பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கோவை செய்தியாளர் : ஜெரால்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Coimbatore, Infant, Local News, Tamil News