கோவையில் மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் பெங்காலி மொழி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் மொழி பிரச்சனை உருவெடுத்து வரும் நிலையில், கோவையில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கோவை காந்தி பார்க் பகுதியில் மாநகராட்சி சார்பில், பொது இடத்தில் குப்பையை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனரில் தமிழ் மொழியில் மேலேயும், பெங்காலி மொழியில் கீழேயும் எழுதப்பட்டிருந்தது.
இதனை கண்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் அப்பகுதியில் அதிகம் வசிப்பதால் பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த பேனர் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banners, Coimbatore, Local News