தாம்பரம் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்த சூர்யா (20), தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனம் வழங்கிய மருந்துகளை வாங்கி 10 நாட்களாக சாப்பிட்டு வந்துள்ளார். இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் உறுவினர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: சுரேஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Death, Local News