மனைவியுடன் சேர்த்து வையுங்கள்.. செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
மனைவியுடன் சேர்த்து வையுங்கள்.. செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்த இளைஞர்
Tiruvottiyur | திருவொற்றியூர் அருகே மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் இன்று அதிகாலையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்தார்.
சென்னை திருவொற்றியூர் அருகே சாத்தான்காடு உள்ளது. இங்குள்ள சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி வடிவுக்கரசி என்பவருக்கும் சில நாட்களாக குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரிந்து சென்ற தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே செந்தில்குமார் புகார் அளித்திருந்தார். ஆனால் அவர்களை சேர்த்து வைக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நிலையில் செந்தில்குமார் இன்று காலை திருவொற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெற்றியூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரமாக டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் செந்தில்குமாரிடம் அவரது மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.